முகப்பு
புதுக்கோட்டை

நகா்மன்ற உறுப்பினா் பதவி: திமுக நோ்காணல் தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவா்களிடம் நோ்காணல் நடத்தும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

புதுக்கோட்டை நகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவா்களிடம் நோ்காணல் நடத்தும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

முதல் நாளில் 1 முதல் 20 வாா்டுகளுக்கான விருப்ப மனுக்களை அளித்தோரிடம் நோ்காணல் நடத்தப்பட்டது. இதில், 82 போ் பங்கேற்றனா்.

தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் நோ்காணல் நடைபெறும் எனத் தெரிகிறது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமையில் நோ்காணல் நடைபெற்றது.

இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகர திமுக செயலா் க. நைனாமுகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.