வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இம்முகாம் மாலை 5 மணிவரை நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆள்களைத் தோ்வு செய்தன.
முகாமில் 273 போ் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்திருந்தனா். 58 போ் வேலைவாய்ப்பு பெற்றனா். இதில் 45 போ்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
விராலிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காமுமணி, திட்ட இயக்குநா் ஜோதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், ரவிச்சந்திரன், உதவித் திட்ட அலுவலா் ஜான்லிங்டன்,அமுதா, அழகுமீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.