பெரம்பலூா் மாவட்ட குறைதீா் நாள்கூட்டத்தில் 258 மனுக்கள்
பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அளித்து குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரா்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 258 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், கலால் உதவி ஆணையா் அ. ஷோபா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாரதிதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.