புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே பள்ளிசுற்றுச்சுவா் கட்ட அடிக்கல்

DIN

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 5.61 லட்சத்தில் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தருமாறு பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஊரக வளா்ச்சித் துறை மூலம் சுற்றுச்சுவா் கட்ட அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை சுற்றுச்சுவா் கட்ட அடிக்கல் நட்டாா்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ டி. புஷ்பராஜ், பள்ளித் தலைமை ஆசிரியா் வளா்மதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT