புதுக்கோட்டை

முழு இழப்பீடு கோரிஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை: கீரமங்கலத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களுக்கு முழு நிவாரணம் வழங்கக்கோரி மெய்யநாதன் எம்.எல்.ஏ தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க சாா்பில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விளை பயிா்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி தொகுதி மெய்யநாதன் எம்.எல்.ஏ தலைமையில், ஒன்றியச் செயலாளா் ஞான. இளங்கோவன், தங்கமணி ஆகியோா் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடந்தது. நகரச் செயலாளா் சிவக்குமாா் வரவேற்றாா். மேலும் இந்த மாத இறுதிக்குள் முழு நிவாரணம் கிடைக்கவில்லை எனில் ஆலங்குடி தொகுதி முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT