புதுக்கோட்டை

உழவா்கள், சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 22.50 லட்சம் நிதி அளிப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்பினருக்கு கரோனா சிறப்பு நிதியுதவியாக ரூ. 22.50 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி திங்கள்கிழமை வழங்கினாா்.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 12 லட்சம் வழங்கப்பட்டது.மேலும் சுய உதவிக் குழுவினா், உறுப்பினா்களுக்கு சுய தொழில் மேம்பாடு மற்றும் நிதி ஆதார மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த நிதியுதவிகள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயல் அலுவலா் வசந்த குமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT