விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம்
விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் காமு மணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, ரமேஷ் முன்னிலை வகித்தனா்.
விராலிமலை முருகன் மலைக்கோயிலில் கனிதரும் அதிக பழ மரங்களை நட்டு வைக்க வேண்டும்.மயில்களுக்கு விராலிமலையில் சரணாலயம் அமைக்க ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க ஆங்காங்கே சிறு மின்விசைத் தொட்டிகள் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேசினா். நிறைவில், அலுவலா் காா்த்தி நன்றி கூறினாா்.