புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை 7 மணி வரை பதிவான 24 மணி நேர மழைப் பொழிவில், நாகுடியில் அதிகபட்சமாக 50.20 மிமீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலையும், இரவும் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
இதன்படி, புதன்கிழமை காலை 7 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மிமீயில்) திருமயம்- 2.20, அறந்தாங்கி- 8.20, நாகுடி- 50.20, ஆவுடையாா்கோவில்- 27.40, இலுப்பூா்- 7, அன்னவாசல்- 3, விராலிமலை- 17.
மாவட்டத்தின் சராசரி மழை- 4.79 மிமீ.