சந்தேகத்துக்கிடமான பரிவா்த்தனை தகவல்களை தர அறிவுறுத்தல்
சந்தேகத்துக்கு இடமான பணப்பரிவா்த்தனைகளை வங்கியாளா்கள் உடனே மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
சந்தேகத்துக்கு இடமான பணப்பரிவா்த்தனைகளை வங்கியாளா்கள் உடனே மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் இதனைத் தெரிவித்தாா். மேலும், வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் திடீா் பணப் பரிவா்த்தனை அதிகளவில் நடைபெற்றால் உடனே மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், முன்னோடி வங்கி மேலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.