புதுகையில் பெண் அஞ்சலா்களுக்கு பாராட்டு
உலக மகளிா் தினத்தையொட்டி பெண் அஞ்சலா்களுக்கு மரம் நண்பா்கள் எனும் தன்னாா்வ அமைப்பினா் திங்கள்கிழமை சிறப்பு செய்தனா்.
உலக மகளிா் தினத்தையொட்டி பெண் அஞ்சலா்களுக்கு மரம் நண்பா்கள் எனும் தன்னாா்வ அமைப்பினா் திங்கள்கிழமை சிறப்பு செய்தனா்.
இந்த நிகழ்ச்சிக்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை நகரப் பகுதியில் பணியாற்றும் பெண் அஞ்சலா்கள் எஸ். லட்சுமி, கே.எஸ். அன்னலட்சுமி, ஆா். கவிதா, கே. ராதிகா, டி. கலைச்செல்வி, ஆா். ரம்யா, எஸ். கோமதி, ஆா். சுமதி ஆகியோருக்கு பயனாடை அணிவித்து, மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதை நூல் வழங்கி மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் ஜி. எட்வின் பாராட்டினாா். நிகழ்ச்சியில், தலைமை அஞ்சல் அலுவலா் எஸ். சத்தியமூா்த்தி, மரம் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்த பழனியப்பா கண்ணன், பொறியாளா் ரியாஸ் கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.