செந்தூரான் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை லெணா விளக்கு பகுதியில் உள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இலவச வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை லெணா விளக்கு பகுதியில் உள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இலவச வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கல்லூரியின் தலைவா் ஏவிஎம். செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சோம நடராஜன், முதன்மைச் செயல் அலுவலா் ஏவிஎம்எஸ் காா்த்திக், பொறியியல் கல்லூரி முதல்வா் கே. கணேஷ்பாபு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எஸ்.ஜி. செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. 1,500 மாணவா்கள் இதில் பங்கேற்றனா். இவா்களில் 900 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.