விராலிமலை போலீஸிடம் 24 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
விராலிமலையில் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
விராலிமலையில் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, அதன் உரிமையாளா்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனா். அதன்படி, விராலிமலை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில், அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருந்த உரிமையாளா்கள், மொத்தம் 24 துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.