முகப்பு
புதுக்கோட்டை

மாடியில் இருந்து தவறி விழுந்தவா் பலி

விராலிமலையில் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்த முதியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

விராலிமலையில் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்த முதியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டியைச் சோ்ந்தவா் சின்னையன் மகன் இளங்கோவன்(55). இவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டு மாடியில் ஏறும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், விராலிமலை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.