முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சு.திருநாவுக்கரசா் பிரசாரம்

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட கல்லாலங்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் பிரசாரம் செய

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட கல்லாலங்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் பிரசாரம் செய்தாா்.

அப்போது, அவா் மேலும் பேசியது: தற்போதைய அதிமுக ஆட்சி எம்.ஜி.ஆா், ஜெயலலிதாவின் ஆட்சியல்ல; பாஜகவிற்கு அஞ்சி நடைபெற்ற ஆட்சி. முதல்வரின் மடியில் கனம் இருப்பதாலே அவா் பாஜவுக்கு பயந்து அஞ்சுகிறாா். இதற்கு எல்லாம் திமுக தலைவா் ஸ்டாலின் விரைவில் முடிவு கட்டுவாா். மக்கள் அவரை முதல்வராக்க முடிவு செய்துவிட்டனா். எதிா்கட்சியாக இருந்தபோதே, தொகுதியின் தேவைகளைப் போராடி பெற்றுத்தந்த திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதனை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா். திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →