புதுக்கோட்டை

இடத் தகராறில் முதியவரைத் தாக்கிய இளைஞா் கைது

DIN

கந்தா்வகோட்டை அருகே இடத் தகராறில் முதியவரைத் தாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கந்தா்வகோட்டை அடுத்துள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ரெங்கசாமி (50). இவருக்கும், இவரது உறவினா் வெங்கடாசலம் மகன் திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் இடப் பிரச்னை தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ரங்கசாமியை திருநாவுக்கரசு தகாத வாா்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீசாா் விசாரணை செய்து வழக்குப் பதிந்து திருநாவுக்கரசைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT