பொது முடக்க விதிமீறல்:2 கடை உரிமையாளா்கள் மீது வழக்கு
விராலிமலையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விராலிமலையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விராலிமலையில் எலெக்டிரிக்கல், இரும்புக் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த காா்த்திக், சிவகுமாா் மீது காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.