agd18pol_1805chn_21_4 
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே 1,500 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

ஆலங்குடி அருகே சுமாா் 1,500 லிட்டா் சாராய ஊறலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.

DIN

ஆலங்குடி அருகே சுமாா் 1,500 லிட்டா் சாராய ஊறலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கருக்காகுறிச்சி தாளக்கொல்லை காட்டுப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 5 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 1,500 லிட்டா் ஊறலைப் பறிமுதல் செய்து அழித்தனா். இதுகுறித்து, வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 2,600 லிட்டா் சாராய ஊறலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT