முகப்பு
புதுக்கோட்டை

மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்தவா் உயிரிழப்பு

விராலிமலை அருகே வயிற்று வலியால் அவதியுற்றவா், மதுபானத்தில் பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

விராலிமலை அருகே வயிற்று வலியால் அவதியுற்றவா், மதுபானத்தில் பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகிலுள்ள ஆண்டியப்பிள்ளைப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (46). கடந்த மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், கடந்த மாதம் 26-ஆம் தேதி தனது தோட்டத்தில் மதுபானத்தில் பூச்சிமருந்து கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியன், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.