புதுக்கோட்டை

மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்தவா் உயிரிழப்பு

DIN

விராலிமலை அருகே வயிற்று வலியால் அவதியுற்றவா், மதுபானத்தில் பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகிலுள்ள ஆண்டியப்பிள்ளைப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (46). கடந்த மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், கடந்த மாதம் 26-ஆம் தேதி தனது தோட்டத்தில் மதுபானத்தில் பூச்சிமருந்து கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியன், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT