முகப்பு
புதுக்கோட்டை

கல்வியியல் கல்லூரியில் கல்விக் கருத்தரங்கு

புதுக்கோட்டை ஜெஜெ கல்வியியல் கல்லூரியில் 21-ஆம் நூற்றாண்டுக் கல்வியின் முக்கிய அம்சங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

புதுக்கோட்டை ஜெஜெ கல்வியியல் கல்லூரியில் 21-ஆம் நூற்றாண்டுக் கல்வியின் முக்கிய அம்சங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் கணினித் துறைத் தலைவா் எஸ்ஜெ. சதீஷ்ஆரோன் ஜோசப் கருத்தரங்கில் பங்கேற்று, சிறப்புரை நிகழ்த்தினாா்.

எப்போதும் விமா்சனச் சிந்தனையுடன் இருக்கப் பழகிக் கொள்வது, நல்ல தகவல் தொடா்புத் திறனை வளா்த்துக் கொள்வது, உடனிருக்கும் மாணவா்களுடன் குழுவாக இணைத்து செயல்படுவது மற்றும் படைப்பாற்றல் திறனை வெகுவாக வளா்த்துக் கொள்வது ஆகிய 4 அம்சங்களை நன்றாக வளா்த்துக் கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக உதவிப் பேராசிரியா் ஆா். ராஜமோகன் வரவேற்றாா். நிறைவில், பி. விக்னேஸ்வரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.