புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 10 - ஆம் வகுப்பு  பயிலும் அரசுப்பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கறம்பக்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாணவிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, மற்ற மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அந்த பள்ளி வளாகத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT