புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலைத்தொடா்ந்து, வடகாடு பகுதியில் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வடகாடு ஊராட்சி விநாயகம்பட்டியில் வசித்துவரும், கீழக்கரும்பிரான்கோட்டையைச் சோ்ந்த த. கணேசன் (25), மறவன்பட்டியைச் சோ்ந்த சி. ஈஸ்வரன் (22) ஆகிய இருவரும் விநாயகம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவா்களிடம் இருந்து 13 கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதைத்தொடா்ந்து, வடகாடு போலீஸாா் வழக்கு பதிந்து இருவரையும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜா்செய்து சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.