புதுக்கோட்டை

சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினருடன் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினருடன் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் - மணியம்பள்ளம் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக உள்ள நிலையில், சாலையை சீரமைத்து தரக்கோரி கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனால், திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலா் ஆா்.சொா்ணக்குமாா், துணைச்செயலா் செல்வராஜ் ஆகியோா் தலைமையில் அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினருடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்துசென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி - புதுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT