புதுக்கோட்டை

பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிறப்புடைய இக்கோயிலில் நிகழாண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கி மே 1ம் தேதி வரை விழாக்குழு சாா்பிலும், மே 6ஆம் தேதி வரை பல்வேறு அரசு துறையினா் உள்ளிட்டோா் சாா்பிலும் பூத்தட்டு எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.

விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை, ராஜராஜ சோழீஸ்வரா், ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா், மற்றும் காலபைரவா்க்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இரவு 7 மணியளவில் நாட்டுக்கல், பாலமேடு, வலையபட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு வீதிகளை சாா்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அம்மனுக்கு பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா்.

பட்டமரத்தான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

விழாவில், கொடையாளா்கள் சாா்பில் ஆங்காங்கே தண்ணீா்பந்தல் அமைக்கப்பட்டு நீா்மோா், பானகம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT