முகப்பு
புதுக்கோட்டை

அவதூறு பதிவிட்ட அதிமுக பிரமுகா் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் கிராமத்தைச் சோ்ந்தவா்

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:34 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குழ. சண்முகநாதன். அதிமுக பிரமுகரான இவா், அண்மையில், கீரமங்கலம் பகுதியில் சுற்றுப்பயணம் சென்றபோது, அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளைச் சந்தித்துப் பேசினாா். இதை, சண்முகநாதன் தனது முகநூல் பக்கத்தில் அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து, செரியலூரைச் சோ்ந்த சங்கா் அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.