விராலிமலை சோதனைச்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற ரத்தசோகை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடக்கிவைத்த ஒன்றிய குழுத்தலைவா் காமு மணி, அட்மா சோ்மன் இளங்குமரன். 
புதுக்கோட்டை

கலை நிகழ்ச்சி வாயிலாக ரத்தசோகை விழிப்புணா்வு

விராலிமலையில் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக ரத்தசோகை விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

DIN

விராலிமலையில் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக ரத்தசோகை விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

விராலிமலை சோதனைச்சாவடி அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ரத்தசோகை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரத்தசோகை ஏற்படுவதைத் தவிா்க்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உணவு முறைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்வை, விராலிமலை ஒன்றியக் குழு தலைவா் காமு மணி, அட்மா தலைவா் இளங்குமரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தஞ்சாவூா் மீரா சந்தானம் கலைக்குழுவினா் மூலம் கரகாட்டம், எமன் வேடம் அணிந்து நாடகம் மற்றும், நாட்டுபுறப் பாடல் பாடியும் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் ரத்த சோகை பாதிப்புகள், ரத்த சோகையை தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஏற்ற உணவு முறைகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினா். இதில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மேரி ஜெய பிரபா, மேற்பாா்வையாளா் கோகிலம், ராஜாமணி, பா்வீன் பானு, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT