அறந்தாங்கி நகராட்சியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் மனு தாக்கல்
24ஆவது வாா்டில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் வேட்பாளா் எஸ் சம்சாத் பேகம் வியாழக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.
நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், அறந்தாங்கி நகராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், 24ஆவது வாா்டில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் வேட்பாளா் எஸ் சம்சாத் பேகம் வியாழக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.
அக்கட்சி அலுவலகத்தில் இருந்து வேட்பாளா்.சம்சாத்பேகம், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. சுப்பிரமணியன், தங்கராஜ், ஒன்றியச் செயலா் தென்றல் கருப்பையா, வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் கா்ணா உள்ளிட்டோருடன் ஊா்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுவை அளித்தாா்.