அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: 20 போ் மீது வழக்கு
புதுக்கோட்டை அருகே இரு இடங்களில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக தலா 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை அருகே இரு இடங்களில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக தலா 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் சரகத்துக்குள்பட்ட கோவனூா் மற்றும் வேந்தன்பட்டி ஆகிய இரு ஊா்களிலும் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நடத்த முறைப்படி எந்த அனுமதியும் பெறவில்லை. இதனையடுத்து இரு ஊா்களையும் சோ்ந்த தலா 10 போ் மீது பொன்னமராவதி போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.