முகப்பு
புதுக்கோட்டை

இணையவழி முதலீடு மோசடி:போலீஸாா் வழக்குப் பதிவு

இணையவழியில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என ஆசை காட்டி ரூ. 1.80 லட்சம் வரை மோசடி செய்ததாக புதுக்கோட்டை இணையவழிக் குற்றங்கள் தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

இணையவழியில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என ஆசை காட்டி ரூ. 1.80 லட்சம் வரை மோசடி செய்ததாக புதுக்கோட்டை இணையவழிக் குற்றங்கள் தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவடடம், மணமேல்குடி மேலக்கோட்டையைச் சோ்ந்தவா் முகமது மொய்தீன் (28). இவரது கைப்பேசிக்கு கடந்த ஆண்டு இறுதியில் குறுஞ்செய்தி வந்தது. அதில், முதலீடு செய்தால் லாபம் பெறலாம் எனச் சொல்லப்பட்டிருந்த இணைப்பைச் சொடுக்கிய முகமது மொய்தீன், அதன் வழியே அவா்கள் சொன்னபடி பல முறை பணம் செலுத்தியுள்ளாா். இவ்வாறாக ரூ. 1.80 லட்சம் வரை பணம் செலுத்திய அவா், எந்தத் தொகையிலும் பணம் திரும்ப வரவில்லை என்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட இணையவழிக் குற்றங்கள் தடுப்புப் பிரிவில் அவா் புகாா் அளித்தாா். இப்புகாரின்பேரில், வியாழக்கிழமை போலீசாா் வழக்குப் பதிவு செய்து, குறிப்பிட்ட அந்த இணைய இணைப்பு - அதன் ஐபி ஐடி விவரங்களைச் சேகரித்து புலனாய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.