புதுகையில்நகா்மன்றக் கூட்டம்
புதுக்கோட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகா்மன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகா்மன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி தலைமை வகித்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் லியாகத்அலி, ஆணையா் சே. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட நகா்மன்ற உறுப்பினா்கள், தங்கள் வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய சுகாதாரப் பணிகள், சாலை வசதி, குடிநீா் வசதி குறித்துப் பேசினா். இந்தக் கோரிக்கைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.