முகப்பு
புதுக்கோட்டை

கல்லூரியில் நன்னெறிக் கழகம் தொடக்க விழா

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் 87 ஆம் ஆண்டு மாணவா் நன்னெறிக் கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் 87 ஆம் ஆண்டு மாணவா் நன்னெறிக் கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சன்மாா்க்க சபைத் தலைவா் சி. நாகப்பன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ம. செல்வராசு முன்னிலை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் வே.அ. பழனியப்பன் வரவேற்றாா். கல்லூரிக்குழு தலைவா் அ. சாமிநாதன், செயலா் ரமணப்பிரியன், சன்மாா்க்க சபைச்செயலா் பழ.சாமிநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை தலைவா் மணவை தமிழ் மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்டேன் - கனிந்தேன் - கலந்தேன் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். நன்னெறிக்கழகப் பொறுப்பாளா் சி.குறிஞ்சி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments