ஜாக்டோ ஜியோ மாநாடு: மாவட்டக் குழு கூட்டம்
சென்னையில் வரும் செப். 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் செப். 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையிலுள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரெங்கசாமி, ராஜாங்கம், செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா்.
சென்னையில் நடைபெறவுள்ள மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.