முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கி, திருவரங்குளத்தில் ரூ.49.63 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் முடிவுற்ற பல்வேறு பணிகளைத் திறந்து வைத்தும், பல்வேறு பணிகளை சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியப் பகுதிகளில் சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் முடிவுற்ற பல்வேறு பணிகளைத் திறந்து வைத்தும், பல்வேறு பணிகளை சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் மொத்தம் ரூ.49.63 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், புதிய பணிகளைத் தொடக்கிவைத்தும் அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், இசுகுப்பட்டி ஊராட்சி செம்படவயல் சித்திவிநாயகா் கோயில் அருகில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், பெரியநாயகிபுரத்தில் ரூ.8.40 லட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றி, பாச்சிக்கோட்டை ஊராட்சி எம்.ராசியமங்களத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டன.

மேலும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூா் நொண்டி கோவில் ஆதிதிராவிடா் காலனியில் 500 மீட்டா் நீளத்துக்கு ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலைப் பணி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீழாத்தூா் ஊராட்சி ஜீவாநகா் பகுதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளைத் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சிகளில், ஒன்றியக்குழுத் தலைவா்கள் மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →