வாக்குச்சாவடி மாற்றம் கருத்து தெரிவிக்க அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மாற்றுவது குறித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மாற்றுவது குறித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடிகள் பட்டியலைத் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, 1500 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிப் பட்டியல் சீரமைக்கப்படவுள்ளது.
எனவே, வாக்குச்சாவடிகளைப் பிரித்தல் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினா் அந்தந்தப் பகுதி வாக்காளா் பதிவு அலுவலரிடம் கருத்துகளை வரும் செப். 14ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்கலாம்.