கறம்பக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினா். 
புதுக்கோட்டை

மனிதநேய ஜனநாயகக்கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையைக் கண்டித்து, மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையைக் கண்டித்து, மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் இருப்பதில்லை. பகல் நேரங்களிலும் ஒரு மருத்துவா் மட்டும் பணியில் இருந்து புறநோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், உரிய மருத்துவ வசதி கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்காளாகி வருகின்றனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் எம். முகமது ஜான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் செல்லச்சாமி, மாநில துணை செயலா் என்.துரைமுகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT