கச்சத்தீவு மீண்டும் நமக்குக் கிடைக்கும் என்றாா் தமிழ்நாடு பாஜக தலைவா் கே. அண்ணாமலை.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் புதன்கிழமை இரவு நடைப்பயணம் மேற்கொண்ட அவா் அரசு மருத்துவமனை அருகே பேசியது:
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்றாா் பிரதமா் மோடி. இதுவரை 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பா் மாதத்துக்குள் மொத்தம் 10 லட்சம் போ் வேலைவாய்ப்பைப் பெற்று விடுவா். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.750 கோடி கடன் பெற்று 31,965 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3.52 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.
5 ஆண்டுகளில் 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவதாக திமுக தோ்தல் அறிக்கையில் கூறியது. ஆனால், கடந்த 27 மாதங்களில் 2 ஆயிரம் பேருக்குக்கூட வழங்க முடியவில்லை.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் - 10 ஆண்டுகளில் 85 மீனவா்கள் ஆழ்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டனா். ஆனால், கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் துப்பாக்கிச்சூடு சம்பவமே நடக்கவில்லை. கச்சத் தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று மத்திய அரசை தமிழக பாஜக சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அது கிடைக்கும் என்றாா் அண்ணாமலை.
அறந்தாங்கி சுங்கச்சாவடி அருகே தொடங்கிய இந்த நடைப்பயணம், எம்ஜிஆா் சிலை, கட்டுமாவடி முக்கம், காமராஜா் சிலை வழியாக அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.