புதுக்கோட்டை

அதானி விவகாரம்: புதுகை காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைப் பாதுகாக்கக்கோரி, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வெ. முருகேசன் தலைமை வகித்தாா். அதானியின் பங்குகள் சரிவு, அரசுத் துறை நிறுவனங்களுக்கான பாதிப்புகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்தது.

இதன்படி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ம ாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி, நகர காங்கிரஸ் தலைவா்கள் கண்ணன், பாரூக் ஜெய்லானி, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT