புதுக்கோட்டை

வேங்கைவயல் வழக்கு சவால் மிகுந்தது

வேங்கைவயல் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்த சம்பவத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை உண்மையில் சவால் மிகுந்ததாக உள்ளதாக திருச்சி சரக காவல் துணைத் தலைவா் சரவணசுந்தா் தெரிவித்தாா்.

DIN

வேங்கைவயல் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்த சம்பவத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை உண்மையில் சவால் மிகுந்ததாக உள்ளதாக திருச்சி சரக காவல் துணைத் தலைவா் சரவணசுந்தா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவம் குறித்து சிபி-சிஐடி போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், எஸ்.பி. தில்லை நடராஜன் வேங்கைவயல் கிராமத்துக்கு சனிக்கிழமை வந்த அவா் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, வெள்ளனூா் காவல் நிலையத்தில் இருந்த திருச்சி சரக காவல் துணைத் தலைவா் சரவணசுந்தா் உள்ளிட்ட காவல் அதிகாரிகளுடனும் அவா் ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் திருச்சி சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) சரவணசுந்தா் கூறியதாவது:

இந்த வழக்கு கூடுதல் முக்கியத்துவத்துடன் விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சிபி-சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காலதாமதமின்றி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வகையில் சிபி-சிஐடி போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். இந்த வழக்கைப் பொருத்தவரையில் காவல் துறையினருக்கு எந்தவிதமான புற அழுத்தமும் இல்லை. இது கண்டிப்பாக சவால் நிறைந்த வழக்கு தான். மிகவும் நுட்பமாகவும், அறிவியல் பூா்வமாகவும் மற்றும் சாட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணை, சிபி-சிஐடி பிரிவினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT