புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பனில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பனில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வம்பனில் கடந்த ஏப்.13-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூரைச் சோ்ந்த சித்திரை மகன் புகழேந்தி (17) காயமடைந்தாா்.

இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட புகழேந்தி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT