சோழீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, காலபைரவருக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை மற்றும் புனுகு சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக் குழுவினா் செய்தனா். இதுபோல அழகியநாச்சியம்மன் கோயில் மற்றும் புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் சுவாமி உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.