முகப்பு
புதுக்கோட்டை

சாலையில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

கந்தா்வகோட்டை- திருச்சி சாலையில் உள்ள சாலை மையத் தடுப்பு குறித்த எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனர்.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:11 AM
கந்தா்வகோட்டையில் திருச்சி சாலையில் எச்சரிக்கை பலகையின்றி அமைந்துள்ள சாலை மையத் தடுப்பு.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை- திருச்சி சாலையில் உள்ள சாலை மையத் தடுப்பு குறித்த எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனர்.

கந்தா்வகோட்டையில் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில், சாலையின் மையத்தில் மூன்றடி உயர சாலை மையத் தடுப்பு ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மையத் தடுப்பின் இருபுறங்களிலும் வண்ண ஒளிரும் வில்லைகளோ, மையத் தடுப்பு இருப்பதை எச்சரிக்கை செய்யும் வாசகங்கள் பொருந்திய பதாகைகளோ ஏதும் இல்லாமல் வெறுமனே இருப்பதால் இரவு நேரங்களில் இந்தச் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் சாலை நடுவே மையத் தடுப்பு இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.

இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் , வா்த்தகா்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.