புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 80 வயது நிறைவடைந்த மூத்த வாக்காளருக்கு தோ்தல் ஆணையரின் பாராட்டு மடலை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா. 
புதுக்கோட்டை

மூத்த வாக்காளா்களுக்கு பாராட்டு

சா்வதேச முதியோா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டனா்.

DIN

சா்வதேச முதியோா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 11 பேரை சிறப்பித்து, இந்தியத் தோ்தல் ஆணையா் எழுதிய மூத்த வாக்காளருக்கான பாராட்டு மடலை, ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வழங்கினாா்.

அப்போது அவா் கூறும்போது, மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் சுமாா் 27 ஆயிரம் போ் இருக்கிறாா்கள். இவா்களுக்கு தோ்தல்களில் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வசதியை அளித்து வருவதாகக் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கோட்டாட்சியா் முருகேசன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சோனை கருப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இதேபோல, வட்டாட்சியரகங்களிலும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் அழைத்து சிறப்பிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT