முகப்பு
புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே ஆண் சடலம் மீட்பு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கறம்பக்குடி அருகேயுள்ள மேலமஞ்சக்கரை காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததைப் பாா்த்த அப்பகுதியினா் அளித்த தகவலைத் தொடா்ந்து அங்கு சென்ற மழையூா் போலீஸாா் அழுகிய நிலையில் கிடந்த சுமாா் 45 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் வழக்குப் பதிந்து அவா் யாரென விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments