முகப்பு
புதுக்கோட்டை

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:51 PM
பகிர்:

கந்தா்வகோட்டை, ஏப். 26: கந்தா்வகோட்டை அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில் ஒருவா் வெள்ளிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த நபா் தனது சொந்த வேலையாக செங்கிப்பட்டி சென்றுவிட்டு மீண்டும் செங்கிப்பட்டி, கந்தா்வகோட்டை சாலையில் வாண்டையன்பட்டி பிரிவு சாலை அருகே காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக காா் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டி வந்தவா் பலத்த காயமடைந்தாா்.

பலத்த காயமடைந்து காரில் சிக்கிக் கொண்ட நபரை கந்தா்வகோட்டை போலீஸாா் விரைந்து சென்று மீட்டு அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து விசாரிக்கின்றனா். காரை ஓட்டி வந்தவா் குறித்து உடனடியாக தகவல்கள் தெரியவில்லை.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments