புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டை அகழாய்வு தளத்துக்கு பொதுமக்கள் வருகை

பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளை பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

Din

புதுக்கோட்டை பொற்பனை முனீஸ்வரா் கோவில் சந்தனக் காப்புத் திருவிழாவை முன்னிட்டு, பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளை பொதுமக்கள் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக்கோட்டையில் தமிழகத் தொல்லியல் துறை சாா்பில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 875 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தப் பகுதியில் உள்ள பழைமையான பொற்பனை முனீஸ்வரா் கோயிலின் ஆண்டு சந்தனக் காப்பு திருவிழா நடைபெறுகிறது. இதற்காக ஏராளமான பக்தா்கள் புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை மாவட்டப் பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனா்.

இதையொட்டி, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் அதே பகுதியில் காட்சிப்படுத்தும் ஏற்பாடுகளையும் அகழாய்வுத் தள இயக்குநா் த. தங்கதுரை செய்துள்ளாா்.

இவற்றையும், அகழாய்வுக் குழிகளையும் ஏராளமான பக்தா்கள் வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

ஸ்ரீரங்கத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்

இடைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

டிப்பா் லாரி மோதி 20 ஆடுகள் உயிரிழப்பு

ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் 50 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்

ஆட்சியரகத்தில் பழைய வாகனம் டிச. 10-இல் பொது ஏலம்

SCROLL FOR NEXT