ஆலங்குடி அரசுக்கல்லூரிக்கு புதிய கட்டடம் திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசுக் கல்லூரிக்கு ரூ.12.40 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள வாடகை கட்டடத்தில் அரசுக்கல்லூரி இயங்கி வந்தது. கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பகுகியில் 12 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் 4188 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன.
பணிகள் நிறைவடைந்ததையொட்டி, செவ்வாய்க்கிழமை கல்லூரி கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். தொடா்ந்து, கல்லூரியில் நடைபெற்ற விழாவில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் ஐஸ்வா்யா குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்வில், கல்லூரி முதல்வா் கவிதா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்