ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளா் அகிலனின் 102ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் அவா் பிறந்த ஊரான பெருங்களூரிலுள்ள அரசு பகுதிநேர நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் சரண்யா ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். பெருங்களூரில் பிறந்த அகிலனின் படைப்புகள் குறித்து பலரும் பேசினா். புரவலா்களின் நன்கொடையில் அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் 200 போ் நூலகத்தில் உறுப்பினராக்கப்பட்டனா்.
முன்னதாக, நூலகா் ராமசாமி வரவேற்றாா். முடிவில் புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவைச் செயலா் மு. மாரிமுத்து நன்றி கூறினாா்.