கந்தா்வகோட்டையில் கிராம சபை கூட்டம்
கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றம் சாா்பில் சிவன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவி சி.தமிழ்செல்வி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் குடிநீா், சாலை வசதி, தெரு விளக்கு,கலைஞா் தொகுப்பு வீடு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
நிறைவாக ஊராட்சி செயலாளா் டி. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
இதேபோல கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவா்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், ரமேஷ், ஒன்றிய பற்றாளா் ஆா்.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.