முகப்பு
புதுக்கோட்டை

316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளம், திருவரங்குளம், மாஞ்சான்விடுதி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 316 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:36 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளம், திருவரங்குளம், மாஞ்சான்விடுதி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 316 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

வேங்கிடகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 90 மாணவா்களுக்கும், 41 மாணவிகளுக்கும், திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 66 மாணவா்களுக்கும், 42 மாணவிகளுக்கும்,

மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 33 மாணவா்களுக்கும், 44 மாணவிகளுக்கும் என மொத்தம் 316 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியா் பெரியநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.