புதுக்கோட்டை

விராலிமலையில் கஞ்சா விற்ற 2 போ் கைது

விராலிமலையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

Din

விராலிமலையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

விராலிமலையில் உள்ள சில கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களும், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கஞ்சா பதுக்கிவைத்தும் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் விராலிமலை சக்தி நகா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்த திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரைச் சோ்ந்த அழகிரி மகன் வினோத்குமாா் (42), லால்குடி காளியம்மன் கோயிலைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கரண் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: தற்கொலைக்கு தூண்டியதாக பல்கலைக்கழக ஊழியா் கைது

காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியா்

மகளிா் உரிமைத் தொகை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயா்த்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு

காசோலை மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து

SCROLL FOR NEXT