முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:19 PM
புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் புதன்கிழமை பனை விதை விதைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பங்கேற்று, பனை விதைகள் விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் கே. செல்வகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மன்னா் கல்லூரி மாணவா்கள் மூலம் நடைபெற்ற இந்த விதைப்பில், சுமாா் 1000 விதைகள் கவிநாடு கண்மாயில் விதைக்கப்பட்டன.